நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு பாடசாலை கற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அக்கரைப்பற்றில் மாலை 4மணிக்கு நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பதுர் நகர வட்டார வேட்பாளர் ஏ.சீ.முஹம்மட் நெளபர் தலைமையில், டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய தவிசாளர் சிறாஜ் மஸ்ஷூர் அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னணியின் கெளரவ உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
NFGGஇன் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Editor
on
December 25, 2019
Rating:
