அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


(பைஷால் இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இன்று (17) திங்கட்கிழமை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச அமைப்பாளர்களுக்குள் இன்று (17) ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதான மற்றும் ஏனைய நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பல அசெளகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது Reviewed by Editor on February 17, 2020 Rating: 5