புத்தளத்தில் 10பேருக்கு கொரோனா தொற்று


புத்தளம் சாஹிரா கல்லூரியில் தனிமைப்படுத்தி இருந்தவர்களின் 20பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக  அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

அப்பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வைத்திய சான்றிதழ் உறுதி செய்ததாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 07 ஆண்களும், 03பெண்களும் அடங்குவதோடு, இவர்களை வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் ஏனைய மக்கள் இந்த தொற்றியிருந்தது விடுபட்டு, தொற்றுக்குள்ளானவர்கள் உடனடியாக சுகமடைவதற்கும் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறும் நகரபிதா பாயிஸ் மேலும் தெரிவித்தார்.
புத்தளத்தில் 10பேருக்கு கொரோனா தொற்று புத்தளத்தில் 10பேருக்கு கொரோனா தொற்று Reviewed by Editor on March 31, 2020 Rating: 5