14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டாருக்கு நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கட்டார் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) உலகளவில் பரவுவதன் காரணமாக அதனை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் பின்வரும் நாடுகள் அடங்கும் என்று அரசு தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது:
பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளாகும்.
இதே வேளை கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க கத்தார் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் இருந்து நுழைய விரும்பும் அனைத்து நபர்களையும் இந்த முடிவு பாதிக்கிறது, வருகையின் போது விசாக்கள், குடியிருப்பு அல்லது பணி அனுமதி உள்ளவர்கள் மற்றும் தற்காலிக பார்வையாளர்கள் உட்பட அடங்குகின்றார்கள்.
இதே நேரத்தில் அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தையும் தவிர்க்குமாறு கத்தார் அரசு அனைத்து குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டாரில் நுழைய தற்காலிக தடை
Reviewed by Editor
on
March 09, 2020
Rating:
Reviewed by Editor
on
March 09, 2020
Rating:
