50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு அமைவாக
நியமனக்கடிதங்கள் பெற்ற பட்டதாரிகள் 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்துச் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அதன் பின்னர் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவும் எக்காரணங்களைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு அமைய, பயிலுனர் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மூன்று நாட்களுக்குள் உரிய பிரதேச செயலகத்தில் தாம் நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்குமாறு, குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆளடையாள அட்டை, பிறப்பத்தாட்சிப் பத்திரம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம சேவகரின் அத்தாட்சி, பட்ட சான்றிதழ் அல்லது உரிய பல்கலைக்கழகத்தினால் பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சிக் கடிதம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது கல்வியமைச்சின் கடிதம் மற்றும் பெயரில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுமாயின் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு நியமனம் கிடைக்கப்பெற்றவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால் நியமனம் இரத்து
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
