உதவி பிரதேச செயலாளராக அஷ்ஷேக். றாசீத் எஹியா நியமிக்கப்பட்டுள்ளார்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக்.றாசீத் எஹியா (நழீமி) பொத்துவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக இன்று (06) பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரி போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து சுமார் ஒரு வருட கால பயிற்சியின் பின்னர் அவர் இன்று உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும், ஜாமிஆ நழீமிய்யா வளாகத்தின் பழைய மாணவரும் ஆவார்.
உதவி பிரதேச செயலாளராக அஷ்ஷேக். றாசீத் எஹியா நியமிக்கப்பட்டுள்ளார் உதவி பிரதேச செயலாளராக அஷ்ஷேக். றாசீத் எஹியா நியமிக்கப்பட்டுள்ளார் Reviewed by Editor on March 06, 2020 Rating: 5