மே 04 ஆம் திகதி வரை நீடிப்பு


இலங்கையில் அமுலில் இருக்கும் ஊடரங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்  திங்கட்கிழமை (27) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த இந்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என அந்த ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது....





மே 04 ஆம் திகதி வரை நீடிப்பு மே 04 ஆம் திகதி வரை நீடிப்பு Reviewed by Editor on April 25, 2020 Rating: 5