அக்கரைப்பற்று நபர் வீடு திரும்பினார்


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்றில் இருந்து இம்மாதம் 08ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குட்பட்டார் என்ற சந்தேகத்தில் சுகாதரப் பிரிவால் வெலிக்கந்த கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் இன்று (25) சனிக்கிழமை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இவர் வெலிக்கந்த வைத்தியசாலையில் வைத்து முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளில் இவருக்கு எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள அவரது மனைவியும் நாளைய தினம் வீடு திரும்பும் சாத்தியம் காணப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நபர் வீடு திரும்பினார் அக்கரைப்பற்று நபர் வீடு திரும்பினார் Reviewed by Editor on April 25, 2020 Rating: 5