150 ஆக இலங்கையில் உயர்வு


இலங்கையில் இன்று (02) இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறித்த இருவரும் நேற்றையதினம் (01) உயிரிழந்த நபரின் அருகில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 21 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 03பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

150 ஆக இலங்கையில் உயர்வு 150 ஆக இலங்கையில் உயர்வு Reviewed by Editor on April 02, 2020 Rating: 5