குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!!


பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் குருநாகலை மாவட்ட பிரதானி, சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் அசங்க நந்தசிறி அவர்களின் செயற்படுத்தலின் அடிப்படையில் அம்மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்கள் அதிகார சபைக்கு கிடைக்கபெற்ற பாவனையாளர் முறைப்பாடுகளின் அடிப்படையில் நிகவெரெடிய மற்றும் அதை அண்டியுள்ள பிரதேசங்களில் புலனாய்வு நடவடிக்கைகளில் நேற்று முன்தினம் (06) ஈடுபட்டார்கள்.

இதன் போது மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை சீமெந்து அதிக விலைக்கு விற்ற விற்பனையாளர் ஒருவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு பாவனையாளர்களிடம் மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!! குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!! Reviewed by Editor on April 08, 2020 Rating: 5