சமூக இடைவெளி பேணாது மதுபானம் கொள்வனவு


நாட்டில் அமுலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மூடப்பட்டிருந்த மதுபான நிலையங்கள் இன்று (20) திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

அந்த வகையில் இன்று கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் அதிக மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பேணாது மது கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

அவ்விடத்திற்கு பொலிஸார் வருகை தந்து சமூக இடைவெளியை பேணுமாறு அவர்களிடம் வலியுறுத்தி கூறினார்கள்.
சமூக இடைவெளி பேணாது மதுபானம் கொள்வனவு சமூக இடைவெளி பேணாது மதுபானம் கொள்வனவு Reviewed by Editor on April 20, 2020 Rating: 5