ஊரடங்கு திகதிகளில் மாற்றம்


இலங்கையில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் ஊடரங்கு தளர்த்தப்பட இருந்த திகதிகளில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களில் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு திகதிகளில் மாற்றம் ஊரடங்கு திகதிகளில் மாற்றம் Reviewed by Editor on April 20, 2020 Rating: 5