e-Passport கடவுசீட்டை வழங்குவதற்காக தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டததை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன் இது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை, ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவிக்கையில் ,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும், பொதுமக்களுக்கும் இதன் மூலம் புதிய நடைமுறை வசதியாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.
கடந்த மாரச் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமால் ராஜபக்ஷ இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
e-Passport கடவுச்சீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Reviewed by Editor
on
April 30, 2020
Rating:
