புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடுகிறது!!



(றிஸ்வான் சாலிஹூ)

ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூட்டப்படவுள்ளது என்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் மூலமும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடுகிறது!! புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடுகிறது!! Reviewed by Editor on August 04, 2020 Rating: 5