பிரதேச சபை தவிசாளராக மீண்டும் தாஹீர் கடமையேற்பு


 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டி யிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் இன்று (10) மீண்டும் தவிசாளராக கடமையேற்றுள்ளார்.

தேர்தல் கால விடுமுறையில் இருந்த அவர், இன்று (10) காலையிலிருந்து நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக கடமைகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்டர்.

இதன்போது சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


(நன்றி - நிந்தவூர் டுடே)

பிரதேச சபை தவிசாளராக மீண்டும் தாஹீர் கடமையேற்பு பிரதேச சபை தவிசாளராக மீண்டும் தாஹீர் கடமையேற்பு  Reviewed by Editor on August 10, 2020 Rating: 5