அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான் எந்த ஒரு பிரச்சனையையும் உங்களுடைய பக்கம் பார்க்க மாட்டேன், மாறாக மக்களின் பக்கமே பார்ப்பேன். நான் உங்கள் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது இருக்கின்ற பிரச்சினை அத்தனையையும் மக்கள் என்னிடம் சொல்வார்கள் என்றால் அதில் நான் விளங்கிக் கொள்வது ஒன்றுதான் நீங்கள் மக்கள் பிரதிநிதியாக எதுவும் செய்யவில்லை என்பதே.
மக்களின் விருப்பு வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வந்து உண்டு, குடித்து உறங்க வேண்டாம். இதன் பிறகு நான் உங்கள் பிரதேசத்திற்கு வருகை தரும் போது மக்கள் என்னிடம் பிரச்சினைகளை சொல்ல இடம் வைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
