தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம், மனோ கணேசன் எம்.பி தெரிவிப்பு

(றிஸ்வான் சாலிஹூ)

ஜக்கிய மக்கள் சக்தி உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மு.கூ (6), ஸ்ரீ.ல.மு.க (5), அ.இ.ம.க (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இரவு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவருடைய முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம், மனோ கணேசன் எம்.பி தெரிவிப்பு தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம், மனோ கணேசன் எம்.பி தெரிவிப்பு Reviewed by Editor on August 09, 2020 Rating: 5