நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஊடகவியலாளர் சட்டத்தரணி முஷரப் முதுநபீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லீம் சமூகத்தில் ஊடகவியலாளராக செயற்பட்ட ஒருவர் அம்பாரை மாவட்டத்தில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை கௌரவிக்கும் வகையில் சிலோன் மீடியா போரத்தினால் பொத்துவில் அறுகம்பை விடுதியில் வைத்து பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதி தலைவர் எஸ்.அஷ்ரப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர் எம்.பி.எம்.றிம்ஸான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
August 16, 2020
Rating:

