வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
குறித்த பெண்மணி நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அனுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
வவுனியாவில் முதலாவது மரணம்
Reviewed by Editor
on
December 27, 2020
Rating:
