(றிஸ்வான் சாலிஹூ)
முஸ்லிம்களின் ஜனாசாக்களை பலவந்தமாக தகனம் செய்வதை எதிர்த்து அக்கரைப்பற்று பதுர் நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் கபன் துணி அமைதிப் போராட்டம் இன்று (25) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு அமைதியான முறையில் வெளிக்காட்டினார்கள்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் தலைமையில் இந்த அமைதி எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பதுர் நகரில் அமைதிப் போராட்டம் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
Reviewed by Editor
on
December 25, 2020
Rating:
