ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்து பதிவிட்ட இளைஞர் கைது



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முகநூலில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெஹிவளை பிரதேசத்தில் வைத்தே இந்த நபர் செவ்வாய்க்கிழமை (12) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்து பதிவிட்ட இளைஞர் கைது ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்து பதிவிட்ட இளைஞர் கைது Reviewed by Editor on January 13, 2021 Rating: 5