அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா?


(எஸ்.ஆப்தீன்-பாலமுனை)

ஒரு ஊரின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின்(Library) பங்களிப்பு மிகவும் அளப்பரியது. ஆனால், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த நூலகத்தை ஊர் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் சேர்ந்து எடுத்த தீர்க்கதரிசனமான? தீர்மானத்தின் விளைவும் அதனாலேற்பட்ட அவலநிலையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.


இன்றும் யாழ்ப்பாண நூலகம் ஏன் அழிக்கப்பட்டது? யார் அழித்தார்கள்? அதன் இழப்பை இன்னும் அவர்களால் ஏன் ஈடுசெய்ய முடியவில்லை? என்பது பற்றி நமது ஊரவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போது நூலகத்தின் அருமையும் பெருமையும் விளங்கும்.
இந்த அவல நிலைக்கு துரித தீர்வு காண அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பாரா???

அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா? அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா? Reviewed by Editor on January 06, 2021 Rating: 5