திருமண பந்தத்தில் இணையவிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்!!!



கேகாலை பிரதேசத்தில் இன்று (14) வியாழக்கிழமை திருமணம் செய்யவிருந் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எம்.பீ.பிரதிப் ரஞ்ஜன் குமாரசிங்க (30) எனும் பட்டதாரியே உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவு செய்தவ இவர், மாலைதீவில் 6 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

திருமண பந்தத்தில் இணையவிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்!!! திருமண பந்தத்தில் இணையவிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்!!!   Reviewed by Editor on January 14, 2021 Rating: 5