காத்தான்குடியில் லொக்டவுன் எப்போது நீக்கப்படும்???

 


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

இன்றும் (14) நாளையும் (15) நாளை மறுதினமும் (16) காத்தான்குடியில் தீர்மானமிக்க நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று தினங்களில் மேற் கொள்ளப்படவுள்ள அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவை வைத்தே லொக்டவுன் முடிவு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூன்று தினங்களிலும் 500 பேருக்கு பரிசோதனைகள் இடம் பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பொது மக்கள் கடந்த நாட்களில் கொடுத்த அதே ஒத்துழைப்பை சுகாதார அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் வழங்க வேண்டுமென சுகாதார அதிகாரிகள் எதிர் பார்க்கின்றனர்.

லொக்டவுன் எடுபடுமா என்ற கேள்வி பலரும் கேட்கும் இன்றைய சூழ் நிலையில் இன்றும் நாளையும் நாளை மறுதினமும் காத்தான்குடியில் தீர்மானமிக்க நாட்களாகும்.

இந்த நிலையில் மிக விரைவாக லொக்டவுனிலிருந்து நாம் வெளியே அர்ப்பணிப்புடனும் சமூப் பொறுப்புடனும் செயற்படுவதுடன் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், மக்களின் நலன்கள் தொடர்பிலும் சிந்தித்து செயற்படுவோம்.


காத்தான்குடியில் லொக்டவுன் எப்போது நீக்கப்படும்??? காத்தான்குடியில் லொக்டவுன் எப்போது நீக்கப்படும்??? Reviewed by Editor on January 14, 2021 Rating: 5