ஜனாதிபதியின் தாராள மனசு!!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த சம்பவம் பொலன்னறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையொன்றில் கட்டிடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பார்த்து, " இது கட்டப்படுவதற்கு காரணமாகயிருந்தவரே இதனை திறந்துவைக்கவேண்டும் " என அழைப்பு விடுத்தார்.

அதற்கிணங்க  முன்னாள் ஜனாதிபதியே இதற்கு காரணமானவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதியின் தாராள மனசு!!! ஜனாதிபதியின் தாராள மனசு!!! Reviewed by Editor on January 17, 2021 Rating: 5