ஆன் சான் சூ கீ இராணுவத்தினரின் பிடிக்குள்.....

மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு கட்சியின் தலைவி ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

இன்றைய தினம் அந்நாட்டு பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஜனாதிபதி உட்பட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களையும் ராணுவத்தினர் இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆன் சான் சூ கீ இராணுவத்தினரின் பிடிக்குள்..... ஆன் சான் சூ கீ இராணுவத்தினரின் பிடிக்குள்..... Reviewed by Editor on February 01, 2021 Rating: 5