
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேச செயலக 73வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு இன்று காலை (04) 8.00 மணிக்கு பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் அவர்களின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், தலைமை பீட சமூர்த்தி முகாமையாளர், மற்றும் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மௌலவி எம்.அமீர் அவர்களினால் துஆப் பிராத்தனை நிகழ்த்தப்பட்டதோடு, அதிதிகளினால் மரநடுகையும் அலுவலக சிரமதான பணியும் இடம்பெற்றது.
சுதந்திர தின கொடியேற்றலும், மரநடுகையும்.
Reviewed by Editor
on
February 04, 2021
Rating:
