(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர சபையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் ஐந்து உத்தியோகத்தர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (10) மாலை அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் தகவல் வள கேட்போர் கூடத்தில் கெளரவ மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது மாநகர சபையில் பணியாற்றி பிரியாவிடை பெற்றுச் செல்லும் குறித்த உத்தியோகத்தர்களுக்கு கெளரவ மாநகர முதல்வர் மற்றும் சக உத்தியோகத்தர்களால் அவர்களின் சேவையை விதந்துரைத்து நினைவுச் சின்னங்களும்,பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர கணக்காளர், செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஐந்து உத்தியோகத்தர்கள் முதல்வரால் பாராட்டி கெளரவிப்பு!!!
Reviewed by Editor
on
March 12, 2021
Rating:
Reviewed by Editor
on
March 12, 2021
Rating:



