மூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் ஐயா காலமானார்!!!



ஆலையடிவேம்பைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்  அமரர்.பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் இன்று (01) திங்கட்கிழமை தனது 89 வது வயதில் காலமானார்.

சுமார் 50 வருடங்களுக்கும் மேலான ஊடகத் துறையில் அனுபவத்தை கொண்ட அமரர். பூ பாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தினகரன், வீரகேசரிகளின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றியவராவார்.

இவரின் இறுதிக் கிரியைகள் நாளை (02) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று அக்கரைப்பற்று பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

மூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் ஐயா காலமானார்!!! மூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் ஐயா காலமானார்!!! Reviewed by Editor on March 01, 2021 Rating: 5