”வரவேற்பும் வாழ்த்தும்” நிகழ்வு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் அரங்கேறியது....


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு புதிதாக வருகை தந்த அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களையும், முன்னாள் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) வியாழக்கிழமை காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் பாடசாலை ஆசிரியர் நலன்பேணும் குழுவினால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியது.



நிகழ்வில், பாடசாலைக்கு புதிதாக வருகை தந்த அதிபர் மற்றும் முன்னாள் அதிபராக கடமையாற்றிய இரு அதிபர்களுக்கும்  இக்குழுவினால் பொன்னாடை மற்றும்  ஞாபகார்த்த சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலையின் சகல வளர்ச்சிப்படிகளிலும் தங்களால் முடியுமான வரை உதவி ஓத்தாசை புரிந்த பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு பாடசாலை நிருவாகத்தால் ஞாபக சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் பாராட்டக்கூடிய விடயமாகும்.













நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி மற்றும் முகாமைத்துவம்) எம்.எம்.சித்தி பாத்திமா அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான் அவர்களும், அதிதிகளாக பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உதவிச் செயலாளர் அசாம் அமீர்,  பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், பாடசாலையின் உதவி மற்றும் பிரதி அதிபர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

”வரவேற்பும் வாழ்த்தும்” நிகழ்வு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் அரங்கேறியது.... ”வரவேற்பும் வாழ்த்தும்” நிகழ்வு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் அரங்கேறியது.... Reviewed by Editor on April 08, 2021 Rating: 5