கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமான கூட்டம்!!!

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான கூட்டமானது வருகின்ற 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது அதற்கான முன்கூட்டிய கலந்துரையாடல் இன்று (30) வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குள் நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் உட்பட கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எம்மால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எமது மக்கள் சார்பாக என்றும் எப்போதும் மேற்க்கொள்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளார்.


கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமான கூட்டம்!!! கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமான கூட்டம்!!! Reviewed by Editor on April 30, 2021 Rating: 5