அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (04) செவ்வாய்க்கிழமை வெளியான  க.பொ.த  உயர்தர பரீட்சை
முடிவுகளின் படி அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து 18 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளார்கள் என்று பாடசாலையின் அதிபர் எஸ்.றிபாயுடீன் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 40 மாணவர்கள் (63 வீதம்) பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகமையை பெற்றுள்ளார்கள் என்றும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில்     Medicine-01, 

                  Bio Science -07, 

                  QS-01, 

                  Physical science - 01, 

                  Commerce - 05, 

              Arts -03  ஆகிய பிரிவுகளில் இந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார்கள்.

இம்மாணவர்கள் இந்த சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு செல்வதற்கும் உதவியாக இருந்த பாடசாலையின் அதிபர், உதவி அதிபர்கள், பிரதி அதிபர்கள், வலய தலைமை ஆசிரியர்கள், இவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரிய ஆசிரியைகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகளுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்!!! அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்!!! Reviewed by Editor on May 04, 2021 Rating: 5