கொவிட் தொற்றினால் மூன்று பேர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் இன்று(15) மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பார் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரும், காத்தான்குடி சேர்ந்த ஒருவருமே மரணமடைந்துள்ளனர் என்று பணிப்பாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று மட்டும் (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கொவிட் தொற்றினால் மூன்று பேர் மரணம்!! கொவிட் தொற்றினால் மூன்று பேர் மரணம்!! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5