புஸல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் தற்போது பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடமாடும் வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மெல்போர்ட் தோட்டப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வதற்குச் சென்ற ஆட்டோவே இவ்வாறு, வீதியை விட்டுவிலகி - வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவருக்கும் சிறு அளவியான காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ விபத்து, இருவருக்கு காயம்!!
Reviewed by Editor
on
May 30, 2021
Rating:
