பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு...

மட்டக்களப்பில் உள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாளை (01) செவ்வாய்க்கிழமை முதல்
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்மை அர்ப்பணித்து சேவை புரியும் பொதுச்சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்திய செயற்பாட்டிற்கு எதிப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பு நாளை முதல் இடம்பெறவுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையின் கொரோனா தொற்று தொடர்பில் தொலைபேசி உரையாடல் மூலம் தமது பணிக்கு இடையூறு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெறவுள்ளது.

ஏனைய தமது சேவைகளில் ஈடுபடவுள்ள பொதுச்சுகாதார பிரிசோதகர்கள் கொரோனா தொற்று நடவடிக்கையில் இருந்து மாத்திரம் தமது பணியை பகிஸ்கரிப்பு செய்யவுள்ளனர். அச்சுறுத்திய குறித்த நபரை கைது செய்யும் வரை இந்த நடவடிக்கை தொடரப்படவுள்ளது.

(தினக்குரல்)

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு... பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு... Reviewed by Editor on May 31, 2021 Rating: 5