

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் , சீ.யோகேஸ்வரன் , ஞா.சிறிநேசன் , முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா , உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் , பிரதித் தவிசாளர்கள் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதோடு, மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும் , இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது , அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடாது , அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த தொல்பொருளிடம் தொடர்பாக தொல்பொருள் ஆராட்சியாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் இது 2200 வருடங்கள் பழமையான இடம் என்றும், சிவன், நாகர் என்போரது குகைக் கல் வெட்டுக்கள் உள்ளதாகவும் இது தொடர்மலை என்று அழைக்கப்படுவதாகவும் அங்கு 10க்கும் மேற்பட்ட குகைகளும் தமிழ்ப் பிராமிக் கல் வெட்டுக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 02, 2021
Rating: