பலஸ்தீனில் ஷஹீதான உயிர்களுக்கு ஐ. நா. நஷ்டஈடு கொடுக்க வேண்டும் இன்றேல் ஐ. நா.வை நிராகரித்து விட்டு முஸ்லிம் ஐக்கிய நாடுகள் Muslim United Nation இனை உருவாக்குவோம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவிப்பு.
பலஸ்தீனில் ஷஹீதான ஒவ்வொரு உயிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் ஐ. நா. வை நங்கள் நிராகரித்து விட்டு எமது முஸ்லிம் Muslim United Nationனை நாங்கள் உருவாக்குவோம் என இவ்வாறு துருக்கி ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்
90% அரபு நாடுகள் கோழைகளாகவும் முனாபிக்குகள் போன்றும் நடந்து கொள்கின்றார்கள்.
கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவுக்கு படைகளை அனுப்ப பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் உடனடியாக ஒரு இராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும்.
நிரந்தர தீர்வுக்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தொடங்குவதற்கு முன் எங்களுடைய நிபந்தனை இதுதான், அல் அக்ஸாவில் இருந்து யூதர்கள் வெளியேறவேண்டும், Sheikh Jarrah இனி யூதர்களுக்கு இல்லை.
போர் நிறுத்தத்திற்க்கு நிபந்தனை ஏற்பட்டால் முழு கிழக்கு ஜெருசலேம் மற்றும் அல்-அக்ஸா எல்லைக்கு அப்பால் இஸ்ரேல் இராணுவம் அகற்றப்படவேண்டும், துருக்கி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் படைகள் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க வேண்டும், காசாவின் முற்றுகை உடனடியாக நீக்கப்பட வேண்டும், இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதாக து துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
UNனை நிராகரித்து MUSLIM UNITED NATIONனை உருவாக்க வேண்டும் - துருக்கி அதிபர்
Reviewed by Sifnas Hamy
on
May 17, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
May 17, 2021
Rating:
