மீராவோடை 04, பாடசாலை வீதியை சேர்ந்த சேகுலெவ்வை முகம்மது றமேஸ் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதை அடுத்து அவர் கல்குடா தொகுதியின் மீராவோடை, மாஞ்சோலை, பதுறியா ஆகிய ஒன்றிணைந்த பிரதேசங்களுக்கான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எம்.எஸ்.எம்.ஸப்வான் தெரிவித்துள்ளார்.
மீராவோடையை வசிப்பிடமாகக் கொண்ட இவர்,முன்னாள் இராணுவ புலாய்வு உத்தியோகத்தராகவும் கடமையாற்றியுள்ளதோடு பிரதேச மக்களை ஒன்றிணைத்து பண்புடன் பழகும் ஒருவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய காங்கிரசில் இணைந்த முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்!!!
Reviewed by Editor
on
June 29, 2021
Rating:
