85 பயணிகளுடன் பயணித்த பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்ததாக பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகளை மீட்க முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு விமானம் விபத்து!!!
Reviewed by Editor
on
July 04, 2021
Rating:
