அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது மாகாண மட்டத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஏதேனும் மாகாணத்தில் இதுவரை கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத அதிபர், ஆசிரியர் அல்லது கல்விசாரா ஊழியர் ஒருவர் இருப்பின், தாம் பணிபுரியும் பாடசாலையின் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி விரைவில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி பெறாத அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வலயக் கல்வி பணிமனைக்கு தெரிவிக்கவும்!!!
Reviewed by Editor
on
July 23, 2021
Rating: