இந்திய உயர்ஸ்தானிகர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்தார்!!!

நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களை இன்று (14) புதன்கிழமை சந்தித்த உயர்ஸ்தானிகர் அவர்கள் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அவர்களின் வாழ்த்து கடிதத்தையும் கையளித்தார்.

இரு நாட்டு எதிர்கால பொருளாதார உறவுகளை பலபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடியதுடன் குறிப்பாக, கொவிட்டுக்கு பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர் என்று அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




இந்திய உயர்ஸ்தானிகர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்தார்!!! இந்திய உயர்ஸ்தானிகர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்தார்!!! Reviewed by Editor on July 14, 2021 Rating: 5