நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றிய பீ.பாசித் அஹமட் கடந்த முறை நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை (திறந்த) போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து, நேர்முக பரீட்சையிலும் தேர்வாகி இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரை கௌரவிக்கும் முகமாக, இன்று (30) வெள்ளிக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பொன்னாடை போர்த்தி, ஞாபக பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவான பாசீத் அஹமட் நிந்தவூரில் கெளரவிப்பு!!!
Reviewed by Editor
on
July 30, 2021
Rating: