வீதி விபத்தில் ஆசிரியை பலி, கணவன் பிள்ளை படுகாயம்!!!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியினசேருநுவர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும்,7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின் மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருமதி. பாமினி ஞானவேல் (51) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


வீதி விபத்தில் ஆசிரியை பலி, கணவன் பிள்ளை படுகாயம்!!! வீதி விபத்தில் ஆசிரியை பலி, கணவன் பிள்ளை படுகாயம்!!! Reviewed by Editor on July 26, 2021 Rating: 5