11 மாவட்டங்களில் டெல்டா- 124 பேர் இதுவரை அடையாளம்...

நாட்டின் 11 மாவட்டங்களில் இதுவரை டெல்டா தொற்றுக்கு இலக்கானவர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட டெல்டா திரிபடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில் ராகம, கடவத்த, கொழும்பு, அங்கொடை, கொட்டிகாவத்தை, பியகம, நுகேகொடை, பொரலெஸ்கமுவ, கல்கிசை, மஹரகம, பிலியந்த, பண்டாரகம, பாணந்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, அம்பாறை, குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


11 மாவட்டங்களில் டெல்டா- 124 பேர் இதுவரை அடையாளம்...  11 மாவட்டங்களில் டெல்டா- 124 பேர் இதுவரை அடையாளம்... Reviewed by Editor on August 07, 2021 Rating: 5