(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை மாநகர எல்லையினுள் உள்ள பல வர்த்தகநிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று (20) மேற் கொள்ளப்பட்டது.
பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக் கட்டணங்கள் அறவிடுவது பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் குறித்த தீடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப் பட்டது இதன் போது வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் தீடீர் சுற்றிவளைப்பு
Reviewed by Editor
on
August 20, 2021
Rating: