தொழில் நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்த பணிப்பாளர் நாயகம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரிக்கு இன்று (14) சனிக்கிழமை காலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு எஸ்.சீ.ஜகத் அவர்கள் கள விஜயம் மேற்கொண்டு வருகை தந்தார்.

வருகை தந்த பணிப்பாளர் நாயகம் அவர்கள், கல்லூரியின் தேவைகள் மற்றும் குறைநெறிகள் கேட்டறிந்ததுடன் எதிர்கால கல்லூரி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார்.

கல்லூரியின் பதில் அதிபர் எஸ்.யூ.எம். இம்தியாஸ், பதிவாளர் ஐ.பியாஸ், தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஷ்ரின் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





தொழில் நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்த பணிப்பாளர் நாயகம் தொழில் நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்த பணிப்பாளர் நாயகம் Reviewed by Editor on August 14, 2021 Rating: 5