முகக்கவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை

முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று (14) சனிக்கிழமை முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளதோடு,அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவ்வாறு இதனை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.




முகக்கவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை முகக்கவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை Reviewed by Editor on August 14, 2021 Rating: 5