நாட்டை தற்போது முடக்கும் நோக்கம் கிடையாது எனவும் தடுப்பூசி தான் இதற்குரிய வழி என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நிலையில் இறுதித் தீர்மானமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில், கொரோனா தொற்று தடுப்பூசியை பொது மக்களுக்கு மிக விரைவாக செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கிய பிறகு எதிர்காலம் கடவுளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினக்குரல்
ஊரடங்கு சட்டம் இனி கிடையாது, எதிர்காலம் கடவுளிடம் - அமைச்சர் கெஹெலிய
Reviewed by Editor
on
August 10, 2021
Rating: