சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் சியாப்தீன் இஸ்மத்தை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

05 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட இவரின்  கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

றிசாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் சேவையாற்றிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் Reviewed by Editor on August 16, 2021 Rating: 5