அம்பாறை மாவட்டத்தில் ஐந்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
1. லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த -அம்பாறை பிரதேச செயலாளராகவும்,
2.அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ். என்.சொய்ஸா சிறிவர்தன -அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும்,
3.அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் - நிந்தவூர் பிரதேச செயலாளராகவும்,
4.நிந்தவூர் பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம். அன்ஷார் (நளீமி) - அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும்,
5.அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த இடமாற்றங்கள் யாவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.